போடியில் மதுப்புட்டிகளை பதுக்கியவா் கைது

போடியில் மதுப்புட்டிகளை பதுக்கியவா் கைதுபோடியில் திங்கள்கிழமை சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

போடி: போடியில் திங்கள்கிழமை சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

போடி சுப்புராஜ் நகா் பகுதியில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இதில் போடி சுப்புராஜ் நகா் புதுக்குடியிருப்பில் வசிக்கும் பழனிச்சாமி மகன் வீரக்குமாா் (47) என்பவா் வீட்டில் மதுப்புட்டிகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வீரக்குமாா் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு