மகாராஷ்டிரத்தில் 12 நக்சலைட்டுகள் கொலை!மகாராஷ்டிர எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் நடந்த மோதலில் நக்சலைட்டுகள் 12 பேர் கொல்லப்பட்டனர். கோப்புப் படம்ஏ.என்.ஐ.
மகாராஷ்டிர எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் நடந்த மோதலில் நக்சலைட்டுகள் 12 பேர் கொல்லப்பட்டனர்.
மகாராஷ்டிரம் – சத்தீஸ்கர் எல்லைப் பகுதியில் உள்ள கச்சிரோலி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கச்சிரோலி மாவட்டத்தின் வான்டோலி கிராமப் பகுதியில், இன்று பிற்பகல், சி-60 கமாண்டோ படையினர் துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல் நடத்தி முன்னேறினர். நக்சலைட்டுகளும் பதில் தாக்குதல் நடத்தினர்.
சுமார் 6 மணிநேரம் இருதரப்புக்கும் இடையே இந்த மோதல் நீடித்ததாக கச்சிரோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 12 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் உடல்களை கைப்பற்றியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், 2 வீரர்கள் படுகாயம் அடைந்ததாகவும் குறிப்பிட்டனர்.
மேலும், நக்சலைட்டுகளிடமிருந்து ஏகே ரக துப்பாக்கிகள் 3, ரைபில் 2, கார்பைன் ரக துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டன.