Saturday, October 19, 2024

மகா நவமி: தலேஜு பவானி கோயிலில் திரண்ட பக்தர்கள்!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

நேபாளத்தில் பிரசித்தி பெற்ற தலேஜு பவானி கோயில் மகா நவமியையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

தலேஜு பவானி கோயிலில் சிறுமிகளைத் தேவியின் அவதாரமாகக் கருதி போற்றி வழிபடுகின்றனர். நேபாளத்தின் காத்மாண்டுவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். இந்தக் கோயிலில் வருடத்துக்கு ஒருமுறை இந்திர யாத்திரை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

இந்த நிலையில், நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று மகா நவமி தினத்தன்று தலேஜு பவானியின் சிலையை கோயில் கருவறைக்குள் எடுத்துச் செல்லப்படுகிறது. நேவாரி மக்களின் முக்கிய தெய்வமாகக் கருதப்படும் தலேஜு பவானியை இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டு வருடத்திற்கு ஒருமுறை சடங்குகளும், பூஜைகளும் செய்து வழிபடுகின்றனர்.

குமாரி பூஜை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது இக்கோயிலில். அங்குள்ள அம்மன் குமாரி வடிவில் பூமிக்கு வந்ததாகக் கருதப்படுகிறது.ண

நேபாள நாட்டிலுள்ள சக்தி பீடங்களில் ஒன்றாக தலேஜு பவானி கோயில் கருதப்படுகிறது. இக்கோயிலில் குறிப்பாக சிறுமிகள் அதிகம் வழிபடுகின்றனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024