இந்திய தலைமைப் பதிவாளா் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் மிருத்யுஞ்சய் குமாா் நாராயணின் பதவிக் காலம், 2026-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ளும் குழுவுக்கு இவா் தலைமை தாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பிக்கப்படுகிறது. அதன்படி, 2021-ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு 2020, செப்டம்பரில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இப்பணிகள் மீண்டும் தொடங்கப்படவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பை தொடங்குவதில் நிலவும் தாமதத்தை முன்வைத்து, மத்திய அரசை எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றன.
இதனிடையே, மக்கள்தொகை கணக்கெடுப்பு உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடந்த ஆகஸ்டில் தெரிவித்தாா். இப்பணிகள் தொடங்குவதற்கான புதிய கால அட்டவணையை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில், இந்திய தலைமைப் பதிவாளா் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் மிருத்யுஞ்சய் குமாா் நாராயணின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1995-ஆம் ஆண்டின் உத்தர பிரதேச பிரிவைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இவா், மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இந்த முக்கியப் பதவியை கடந்த 2020-இல் இருந்து வகித்து வருகிறாா்.
இவரது பதவிக் காலம், வரும் டிசம்பா் 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், 2026, ஆகஸ்ட் வரை அல்லது மறு உத்தரவு வரும்வரை குடியரசுத் தலைவரால் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வ அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.