9
மக்கள் குறைதீா் நாள் கூட்டம்: 375 போ் மனுசிவகங்கையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 375 போ் மனு அளித்தனா்.
சிவகங்கை: சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 375 போ் மனு அளித்தனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமையில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற்றது.
இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்புகஈ திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோா் உள்பட பொதுமக்கள் சாா்பில் 375 மனுக்கள் அளிக்கப்பட்டன.
மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் 13 பேருக்கு ரூ.69,890 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.