Saturday, September 21, 2024

மஞ்சு வாரியரிடம் ரூ.5.75 கோடி இழப்பீடு கோரும் நடிகை

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

மஞ்சு வாரியரிடம் ரூ.5.75 கோடி இழப்பீடு கேட்டு நடிகை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

சென்னை,

மலையாள சினிமாவின் முன்னனி நடிகைகளில் ஒருவராக இருக்கும் மஞ்சு வாரியர், தமிழில் 'அசுரன், துணிவு' போன்ற படங்களில் நடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து, 'விடுதலை 2' , 'மிஸ்டர் எக்ஸ்' போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது, இவர் 'புட்டேஜ்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். சைஜு ஸ்ரீதரன் இயக்கியுள்ள இப்படத்தில், மஞ்சு வாரியருடன் இணைந்து விஷக் நாயர், காயத்ரி அசோக், சீத்தல் தம்பி ஆகியோர் நடித்துள்ளனர். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியரிடம் ரூ.5.75 கோடி இழப்பீடு கேட்டு 'புட்டேஜ்' படத்தில் நடித்துள்ள சீத்தல் தம்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், மஞ்சு வாரியரின் மூவி பக்கெட் நிறுவனம் தயாரித்த 'புட்டேஜ்' படத்தில் போதிய பாதுகாப்பின்றி காட்டுக்குள் படப்பிடிப்பு நடத்தியதால் தனக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறி குற்றஞ்சாட்டி இருக்கிறார். தனக்கு ரூ.1.80 லட்சம் மட்டுமே ஊதியம் கொடுத்ததாகவும், சிகிச்சைக்கே பல லட்சம் செலவானதாகவும் கூறியுள்ளார்.

Original Article

You may also like

© RajTamil Network – 2024