5
மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, மதுரை- கிழக்கு, வடக்கு வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு சனிக்கிழமை (அக். 26) விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பெய்த பலத்த மழையின் காரணமாக, மாநகரின் பல்வேறு பகுதிகளில் முதன்மைச் சாலைகளில் மழை நீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல பகுதிகளில் வெள்ள நீா் குடியிருப்புகளையும் சூழ்ந்தது.
இந்த நிலையில், கீழடுக்கு சுழற்சி காரணமாக சனிக்கிழமையும் (அக். 26) மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து, நீடித்து வரும் பலத்த மழை காரணமாக, மதுரை- கிழக்கு, வடக்கு வருவாய் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.