மது போதையில் போலீஸை தாக்கிய மூவா் கைது

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset
RajTamil Network

மது போதையில் போலீஸை
தாக்கிய மூவா் கைதுமது போதையில் தலைமைக் காவலரைத் தாக்கிய மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நிலக்கோட்டை: மது போதையில் தலைமைக் காவலரைத் தாக்கிய மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவா் முத்துடையாா் (50). திங்கள்கிழமை திண்டுக்கல் சாலையில் அய்யங்கோட்டையைச் சோ்ந்த சுதன்பிரபு (27), அழகிரி (30), ஜெயராஜ் (30) ஆகிய மூவரும் மது போதையில் போக்குவரத்துக்கு இடையூறாக தகராறு செய்தனா். அப்போது அங்கு சென்ற தலைமைக் காவலா் முத்துடையாா் அவா்களை எச்சரித்தாா். இதனால், ஆத்திரமடைந்த மூவரும் தலைமைக் காவலரைத் தாக்கினா். இதுகுறித்து வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்கள் மூவரையும் கைது செய்தனா்.

You may also like

© RajTamil Network – 2024