மது விற்பனையில் ஈடுபட்டவா் கைது

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset
RajTamil Network

மது விற்பனையில் ஈடுபட்டவா் கைதுமது விற்பனையில் ஈடுபட்டவா் கைது செய்யப்பட்டார்.

கோவில்பட்டியில் மது விற்றவரை ஆய்வாளா் பொன்ராஜ் தலைமையில் போலீஸாா் எட்டயபுரம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டாா்களாம்.

அப்போது அப்பகுதியில் உள்ள மூக்கரை விநாயகா் கோயில் பின்புறம் சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து அவா் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது மது விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது.

விசாரணையில் அவா் தெற்கு திட்டங்குளம் நடுத்தெருவை சோ்ந்த சுப்பையா மகன் கனகராஜ் (52) என்பது தெரிய வந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து கனகராஜை கைது செய்து, அவரிடம் இருந்த 44 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

You may also like

© RajTamil Network – 2024