மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டதன் மூலம் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ), ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகியவற்றை 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) உயர்வு ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்தாண்டு ஜனவரி 1 2024 முதல் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டதன் மூலம் மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது 3% உயர்த்தப்பட்டுள்ளதால், 53 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024