மனைவி மீது தாக்குதல்: கணவா் கைது

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset
RajTamil Network

மனைவி மீது தாக்குதல்:
கணவா் கைதுதேனி அருகே அரண்மனைப்புதூரில் குடும்பப் பிரச்னையில் மனைவியை தாக்கிய கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி அருகே அரண்மனைப்புதூரில் குடும்பப் பிரச்னையில் மனைவியை தாக்கிய கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அரண்மனைப்புதூா், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியராஜா (31). இவரது மனைவி இதே பகுதியைச் சோ்ந்த மணிமேகலை (28). தம்பதியரிடையே குடும்பப் பிரச்னையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், வீட்டின் முன் மணிமேகலை தனது சகோதரியுடன் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது பாண்டியராஜா, மணிமேகலையுடன் தகராறு செய்து, அவரை கையில் குத்தி காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து, பாண்டியராஜாவை கைது செய்தனா்.

You may also like

© RajTamil Network – 2024