மராட்டிய மாநிலத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – 4 பேர் கைது

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

மும்பை,

மராட்டிய மாநிலம் தாராஷிவ் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த விஜய் காட்கே(25) என்ற நபர் அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். விஜய் காட்கே ஏற்கனவே பழக்கமானவர் என்பதால், அந்த சிறுமி அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

ஆனால் அங்கு, விஜய் காட்கேவுடன் மேலும் 4 பேர் இருந்துள்ளனர். அவர்கள் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து தப்பித்த சிறுமி, தனக்கு நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 4 பேரை கைது செய்தனர். அதே சமயம், முக்கிய குற்றவாளி விஜய் காட்கே தலைமறைவானார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024