Wednesday, September 25, 2024

மருத்துவரின் தலைமுடியைப் பிடித்து கம்பியில் இடித்த நோயாளி.. என்ன நடக்கிறது?

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

நாடு முழுவதும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில், திருப்பதியில் நோயாளி ஒருவர் பெண் மருத்துவரின் தலை முடியைப் பிடித்து, கட்டில் கம்பியில் இடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பதியில் உள்ள எஸ்விஐஎம்எஸ் மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

வார்த்தைகளால் பதில் சொல்லி எதிர்பார்த்த வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டாம்: மு.க. ஸ்டாலின்

இந்த சிசிடிவி காட்சியில், மருத்துவரைத் தாக்கிய நோயாளி, சிகிச்சை செய்துகொண்டிருந்த மருத்துவரை நேருங்கி, அவரது தலை முடியை கையில் பிடித்து, அங்கிருந்த இரும்புக் கட்டிலின் கம்பியில் மருத்துவரின் தலையை இடிக்கிறார். அங்கு இருந்த மற்ற மருத்துவர்கள் விரைந்து சென்று மருத்துவரைக் காப்பாற்றுகிறார்கள்.

இது குறித்து, பாதிக்கப்பட்ட மாணவி, மருத்துவமனையின் இயக்குநருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், எதிர்பாராதவகையில், பங்காரு ராஜு என்ற நோயாளி தன்னை தாக்கியிதாகவும், அவரிடம் கூர்மையான ஆயுதங்கள் ஏதேனும் இருந்திருந்தால் உயிருக்கே ஆபத்தாகியிருக்கும் என்றும் சம்பவ இடத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் யாருமே இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, மருத்துவமனை மருத்துவர்கள், தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி மருத்துவமனையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொல்கத்தாவில், பெண் மருத்துவர் வன்கொடுமைக்கு உள்ளாகி, கொலை செய்யப்பட்ட வழக்கு நாட்டையே உலுக்கியிருக்கும் நிலையில், திருப்பதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024