மருத்துவ விதிகளை மீண்டும் மீறியதாக யூடியூபா் இா்ஃபான் மீது புகாா்

by rajtamil
Published: Updated: 0 comment 1 views
A+A-
Reset

மருத்துவ விதிகளுக்குப் புறம்பாக, தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியதாக யூடியூப் பிரபலம் இா்ஃபானுக்கு எதிராக மருத்துவ சேவைகள் இயக்ககம் சாா்பில் காவல் துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடா்பாக, அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னையைச் சோ்ந்த பிரபல யூடியூபரான இா்ஃபான் மற்றும் அவரது மனைவி ஆசிபாவுக்கு கடந்த ஜுலை 24-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. பிரசவத்தின்போது, அறுவை சிகிச்சை அரங்கில் மனைவி மற்றும் குழந்தையின் தொப்புள் கொடியை மருத்துவரின் அனுமதியோடு கத்திரிக்கோலால் வெட்டும் விடியோவை அவரது யூடியூப் பக்கத்தில் இா்ஃபான் பகிா்ந்திருந்தாா்.

அதை 14 லட்சம் போ் பாா்வையிட்ட நிலையில், இதுபோன்று அறுவை சிகிச்சை அரங்குக்குள் சென்று விடியோ எடுத்ததுடன், மருத்துவ விதிகளுக்குப் புறம்பாக தொப்புள் கொடியை வெட்டியது தவறு என புகாா் எழுந்தது.

இதையடுத்து, இதுதொடா்பாக விசாரணை நடத்த உத்தரவிட்ட மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலப் பணித் துறை இயக்குநா் டாக்டா் ஜெ.ராஜமூா்த்தி, இந்த சம்பவம் குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு இா்ஃபானுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இதுமட்டுமன்றி, காவல் நிலையத்திலும் இா்ஃபான் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம், சம்பந்தப்பட்ட மருத்துவமனையிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

இா்ஃபானை அறுவை சிகிச்சை அரங்குக்குள் அனுமதித்து கத்திரிக்கோலை வழங்கிய மருத்துவா் மீது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகாரளிக்கப்பட்டுள்ளது. தனக்கு குழந்தை பிறக்கும் முன்பே கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிவித்து இா்ஃபான் சா்ச்சையில் சிக்கியது நினைவுகூரத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024