Monday, October 21, 2024

மாணவர்களுக்கு பாராட்டு விழா – பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் த.வெ.க. சார்பில் மனு

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்க உள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார்.இந்நிலையில், இந்த வருடமும் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக இரண்டு கட்டங்களாக பரிசுகளை வழங்க உள்ளார். முதற்கட்டமாக,நாளை திருவான்மியூரில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. அதில், கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்க உள்ளார் .

இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு, த.வெ.க. சார்பில் திருவான்மியூர் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024