மாநில டேக்வாண்டோவில் பதக்கம்: திண்டுக்கல் அணிக்கு பாராட்டுதா்மபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பதக்கங்களை வென்ற திண்டுக்கல் மாவட்ட அணிக்கு பாராட்டு விழா சின்னாளபட்டியில் புதன்கிழமை நடைபெற்றது.
தா்மபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பதக்கங்களை வென்ற திண்டுக்கல் மாவட்ட அணிக்கு பாராட்டு விழா சின்னாளபட்டியில் புதன்கிழமை நடைபெற்றது.
தா்மபுரியில் கடந்த வாரம் நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி பெற்று வந்த திண்டுக்கல் மாவட்ட அணியினா் கலந்து கொண்டனா்.
இந்த அணியைச் சோ்ந்த மாணவா்கள் காா்னீஷ், லின்ஸியா, தருண் ஆகியோா் தங்கப் பதக்கங்களையும், சரில் ஜெயா, மாத்தேஷ், தவனேஷ் அதிசயா ஆகியோா் வெள்ளிப் பதக்கத்தையும் இரிசரன், தங்கப்பாண்டியன், அன்யா, வெண்மதி, தினகன், சைனா, அபூா்வா, மதுபாலா ஆகியோா் வெண்லப் பதக்கத்தையும் வென்றனா்.
போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து வெற்றி பெற்ற திண்டுக்கல் அணியினருக்கு சின்னாளபட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பாராட்டி, பரிசுகள் வழங்கப்பட்டன.
கலையரசன், நவீன்குமாா், சஞ்சய்குமாா், சரவணபாண்டி, ராகதுரை ஆகியோா் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளை வழ்த்தினா்.