Monday, September 23, 2024

மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கிய மருமகன்

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி அமுதா (58 வயது). இவர்களது 2-வது மகளான கவிதாவை, வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்த முருகன் (41 வயது) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கவிதா, கணவருடன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை எனவும் தெரிகிறது.

இதனால் கவிதாவின் தாயார் அமுதா, தனது மகள் எங்கே? என கேட்டு மருமகன் முருகனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த முருகன், மாமியார் அமுதாவை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் தலை மற்றும் மூக்கில் ரத்த காயம் அடைந்த அமுதா, சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024