மாமியார் வீட்டிற்கு செல்ல அரசுப் பேருந்தை திருடிச் சென்றதால் பரபரப்பு

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

ஆந்திராவில் மாமியார் வீட்டிற்கு செல்ல அரசுப் பேருந்தை திருடிச் சென்றதால் பரபரப்பு!பேருந்து திருட்டு

பேருந்து திருட்டு

ஆந்திராவில் தனது மனைவியை சந்திப்பதற்காக அரசுப் பேருந்தை திருடி மாமியார் வீட்டிற்கு ஓட்டிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நந்தியாலா மாவட்டத்தில் உள்ள ஆத்மகூரு பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து காணாமல்போன நிலையில், காவலர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.

அப்போது அந்த பேருந்தை, முச்சுமரி கிராமத்தை நோக்கி ஒருவர் ஓட்டிச்செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அரசுப் பேருந்தை மடக்கி, அதை ஓட்டிச்சென்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விளம்பரம்இதையும் படிங்க: டெல்லியில் மழைநீரில் சிக்கி 3 ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் பலி.. மாணவர் சங்கத்தினர் போராட்டம்

அதில் அரசுப் பேருந்தை ஓட்டிச்சென்றவர் வேங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த துர்கையா என்பதும், மாமியார் வீட்டிலுள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக முச்சுமரி கிராமத்திற்கு செல்ல இருந்தபோது, அதிகாலை நேரத்தில் பேருந்து இல்லாததால் அரசுப் பேருந்தை தாமே ஓட்டிச்சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். உடனடியாக காவல்துறை அதிகாரிகள் பேருந்தை மீட்டதுடன், லாரி ஓட்டுநர் துர்க்கையாவை கைது செய்துள்ளனர்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Andhra Pradesh

You may also like

© RajTamil Network – 2024