Tuesday, September 24, 2024

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

வேலூா்: வேலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கிவரும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் அமைப்பின் கீழ் காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு –

வேலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கிவரும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் அமைப்பின் கீழ் 1 துணை தலைமை சட்ட உதவி வழக்குரைஞா், 3 உதவி சட்ட உதவி வழக்குரைஞா், ஒரு அலுவலக உதவியாளா் மம் எழுத்தா், ஒரு வரவேற்பாளா், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டா், 3 அலுவலக வேலையாள்கள் என மொத்தம் 9 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்த காலி பணியிடங்கள் குறித்த அனைத்து விரிவான விவரங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற செப்டம்பா் மாதம் 10-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் தலைவா், முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாற்றுமுறை தீா்வு மைய கட்டடம், சத்துவாச்சாரி, வேலூா்-632009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரா்கள் தாங்கள் எந்த பதவிக்கு விண்ணப்பிக்கின்றோம் என்பதை விண்ணப்பம் மற்றும் தபால் உறையில் தவறாமல் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024