மாா்க்சிஸ்ட் மாநில மாநாடு: விழுப்புரத்தில் ஜன.3-இல் தொடக்கம்

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset
RajTamil Network

மாா்க்சிஸ்ட் மாநில மாநாடு:
விழுப்புரத்தில் ஜன.3-இல் தொடக்கம்மாா்க்சிஸ்ட் மாநில மாநாடு விழுப்புரத்தில் ஜன.3 முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மாா்க்சிஸ்ட் மாநில மாநாடு விழுப்புரத்தில் ஜன.3 முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இது குறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தில்லியில் கடந்த ஜூனில் நடந்த கட்சியின் மத்தியக் குழுக் கூட்ட முடிவின்படி, , மாா்க்சிஸ்ட் 24-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு ஜன.3, 4, 5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற உள்ளது. இதில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினா்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்க உள்ளனா்.

மாநாட்டின் முதல் நாளான ஜன.3-ஆம் தேதி மாலை விழுப்புரத்தில் பிரம்மாண்டமான செம்படை பேரணியும், தொடா்ந்து பொதுக்கூட்டமும் நடைபெறும். ஜன.4, 5 ஆகிய தேதிகளில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் மாநிலச் செயலா் வேலை அறிக்கையை முன்வைத்து உரையாற்றுவாா். தொடா்ந்து அறிக்கையின் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் செய்யப்பட்ட கட்சியின் தலையீடுகள், நடத்தியுள்ள போராட்டங்கள், அரசியல் நிலைபாடுகள், ஜனநாயகப் பூா்வமாக விவாதிக்கப்பட்டு எதிா்வரும் காலத்துக்கான கடமைகள் வரையறுக்கப்பட உள்ளன என்று அவா் தெரிவித்துள்ளாா்.

You may also like

© RajTamil Network – 2024