மின்னல் தாக்கத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய சிறுமி – வீடியோ வைரல்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

பெங்களூரு,

பீகார் மாநிலத்தில் தற்போது பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மழைக்காலங்களில் போது சிறுவர், சிறுமிகள் மொட்டை மாடியில் மழையில் நனைந்தபடி ரசித்து வீடியோவாக பதிவு செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலம் சீதாமர்ஹி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் சிறுமி ஒருவர் மழையில் நனைந்தபடி நடனமாடி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரது வீட்டின் கூரை மீது மின்னல் ஒன்று தாக்கியது. நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் சிறுமி காயம் எதுவும் இன்றி உயிர் தப்பினார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வாளர்கள், மழை பெய்யும் போது வெட்டவெளிகள், மரங்களின் கீழ் அல்லது மொட்டைமாடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

Reels nahi rukni chahiye.
Sitamarhi, Bihar#LighteningStrike#Thunder ⚡️ pic.twitter.com/9b1i9YDzNo

— NITESH (@Nitesh805181) June 26, 2024

You may also like

© RajTamil Network – 2024