மீனவர்களுடன் உண்ணாவிரதப் போராட்டம்: எடப்பாடி பழனிசாமி

by rajtamil
Published: Updated: 0 comment 5 views
A+A-
Reset

மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுகவினர் கலந்து கொள்ளவிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 22 மீனவர்களையும், 2 விசைப் படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் விசைப்படகு மீனவர்கள் ஒன்றிணைந்து செப்.9-ம் தேதியன்று நடத்த உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ஊ. ராஜூ, சண்முகநாதன்,செல்லப்பாண்டியன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024