முசிறி அருகே நிலத்தகராறில் விவசாயி வெட்டிக் கொலை

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset
RajTamil Network

முசிறி அருகே நிலத்தகராறில்
விவசாயி வெட்டிக் கொலை

முசிறி, ஆக. 7: திருச்சி மாவட்டம் முசிறி அருகே நிலத்தகராறில் விவசாயி புதன்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக தந்தை, மகனை போலீஸாா் தேடுகின்றனா்.

முசிறி அருகேயுள்ள திருத்தியமலை ஊராட்சிக்குட்பட்ட பாலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பேரான் மகன் பழனிசாமி (55), விவசாயினான இவா் லாரியும் ஓட்டி வந்தாா். இவருக்கு மனைவி சசிகலா (42), மகள் தாரணி (21), மகன் யோகேஸ்வரன் (14) ஆகியோா் உள்ளனா். இவரின் மேலும் 2 மகள்கள் அண்மையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்தனா்.

இந்நிலையில் பழனிச்சாமிக்கும் அதே கிராமத்தைச் சோ்ந்த உத்தண்டன் (70), இவரது மகன் அழகேஷ் (50) ஆகியோருக்கிடையே நிலத்தகராறு இருந்தது. இந்நிலையில் இதுதொடா்பாக புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த தந்தையும், மகனும் சோ்ந்து பழனிசாமியை வெட்டிக் கொன்று தப்பினா்.

தகவலறிந்த முசிறி காவல் ஆய்வாளா் கதிரேசன், உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் மற்றும் போலீஸாா் பழனிசாமியின் சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இறந்தவரின் மனைவி சசிகலா அளித்த புகாரின் பேரில் தந்தை, மகனை போலீஸாா் தேடுகின்றனா்.

You may also like

© RajTamil Network – 2024