தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27.9.2024) புதுதில்லியில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.
மோடிடன் சந்திப்பு
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (27.9.2024) புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்திட தேவையான மத்திய அரசின் நிதி, சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு ஆகிய மூன்று முக்கிய விஷயங்கள் குறித்த கோரிக்கை மனுவை வழங்கினார்.
சொத்து வரி மீண்டும் உயர்வு: தீர்மானம் நிறைவேற்றம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடமிருந்து கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மேற்படி கோரிக்கைகள் குறித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் மறைந்த சீதாரம் யெச்சூரியின் இல்லத்துக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு முதல்வா் ஆறுதல் தெரிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இன்று மாலை 5.35 மணிக்கு தில்லியில் இருந்து புறப்படும் முதல்வர், இரவு 8.20 மணிக்கு சென்னை வந்தடைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.