முத்தழகு தொடர் முடிகிறது! கடைசிநாள் படப்பிடிப்பு விடியோவை பகிர்ந்த நடிகை!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் முத்தழகு தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

விரைவில் இத்தொடர் முடியவுள்ள நிலையில், இறுதிக்காட்சி படப்பிடிப்பை முத்தழகு குழுவினர் நிறைவு செய்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3.30 மணிக்கு முத்தழகு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் கடந்த 2021 முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

ஷோபனா, வைஷாலி தனிகா, ஆஷிஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்த இந்த சீரியல், 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவந்த நிலையில், அடுத்த வாரத்துடன் இந்தத் தொடர் முடிவுக்கு வர உள்ளது.

விவசாய பெண்ணின் கதை என்ற அடைமொழியோடு தொடங்கினாலும் இடையே கதையே வேறொரு பக்கம் பயணித்தது. இரட்டை மனைவியுடனான கணவனை மையப்படுத்தி கதை நகர்ந்தது.

இதையும் படிக்க | கண்ணான கண்ணே சீரியல் நாயகியின் புதிய தொடர்!

இந்நிலையில் முத்தழகு தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகளை குழுவினர் எடுத்துமுடித்துள்ளனர். இதில் இறுதிநாளில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட விடியோவை நடிகை வைஷாலி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram

A post shared by PONNIMUTHAZHAGU (VIVASAYI) (@ponnimuthazhaguvijaytv)

விஜய் தொலைககாட்சியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி அக். 6 முதல் ஒளிபரப்பாகவுள்ளதால், ஒருசில தொடர்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனிடயே பிக் பாஸ் தொடங்கும் வாரத்தில் முத்தழகு தொடர் முடிகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024