முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை

சென்னை: சென்னை தி.நகர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீதான வழக்குகளில் 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், சென்னை தி.நகர் தொகுதிஅதிமுக முன்னாள் எம்எல்ஏ.வும், அதிமுக தென்சென்னை வடமேற்கு மாவட்டச் செயலாளருமான சத்யா மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இரு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

அதில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2.64 கோடி மதிப்பி்ல் சொத்து குவிப்பில் ஈடுபட்டதாகவும், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 35 லட்சத்தை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் பதியப்பட்ட இந்த வழக்குகளின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, இந்த வழக்குளை விரைந்து விசாரித்து முடிக்கும் வகையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடக் கோரியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும்நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர்அடங்கிய அமர்வில் விசாரணைக்குவந்தது. அப்போது லஞ்சஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ், இந்த வழக்குகளில் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உறுதியளித்தார். அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024