0
மும்பையில் உள்ள 14 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் புதன்கிழமை காலை 3 பேர் உயிரிழந்தனர்.
மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ரியா பேலஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் உள்ள வீட்டில், புதன்கிழமை காலை 8 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வீரர்கள், ஒரு மணிநேரம் போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்துள்ளனர்.
இதையும் படிக்க : கனடா விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்கும் என்று எதிர்பார்த்தோம்: அமெரிக்கா
இந்த விபத்தில், படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் அவர்கள் உயிரிழந்ததாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.