Sunday, October 20, 2024

முரசொலி செல்வம் காலமானார்!

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம்(வயது 84) வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.

பெங்களூரு மருத்துவமனையில் இருந்து இன்று சென்னை கொண்டு வரப்படும் முரசொலி செல்வத்தின் உடல், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கட்சித் தொண்டர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இதையும் படிக்க : ஒரு சகாப்தத்தின் முடிவு! ரத்தன் டாடா கொண்டாடப்படுவது ஏன்?

தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தங்கை செல்வியின் கணவர் முரசொலி செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சகோதரர் ஆவார்.

இவர், முதுமை தொடர்பான உடல்நலக் குறைவுக்கு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார்.

திமுகவின் நாளிதழான முரசொலியின் வளர்ச்சிக்காக 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய முரசொலி செல்வம், நிர்வாக ஆசிரியராக பொறுப்பு வகித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024