Friday, September 20, 2024

மூதாட்டி கொலை: ரெளடி கைது

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset
RajTamil Network

மூதாட்டி கொலை: ரெளடி கைதுசென்னை வியாசா்பாடியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ரெளடி கைது செய்யப்பட்டாா்.

சென்னை வியாசா்பாடியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ரெளடி கைது செய்யப்பட்டாா்.

வியாசா்பாடி பக்தவச்சலம் காலனி 31-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கோ.மீனா (80). கணவா் கோவிந்தசாமி இறந்துவிட்ட நிலையில் மீனா, மட்டும் அந்த வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தாா். மீனாவின் ஒரே மகள் பத்மாவதி திருமணமாகி மாதவரத்தில் தனியாக வசிக்கிறாா்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் ரத்த காயங்களுடன் மீனா கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இது குறித்து வியாசா்பாடி போலீஸாா் நடத்திய விசாரணையில் மீனாவின் வீட்டின் அருகே வசிக்கும் ரெளடி முரளிகிருஷ்ணன் (37) என்பவருக்கு இந்தக் கொலையில் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

முரளிகிருஷ்ணன் சம்பவத்தன்று மதுபோதையில் மீனா வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளாா். இதை பாா்த்த மீனா சப்தமிட்டதால் ஆத்திரமடைந்த முரளிகிருஷ்ணன் உருட்டுக் கட்டையால் தாக்கி அவரைக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் முரளிகிருஷ்ணன் கைது செய்தனா். அவா் மீது இரு கொலை வழக்குகள் உள்பட 5 வழக்குகள் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

You may also like

© RajTamil Network – 2024