மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவு
மெக்சிகோ நகரின் வடமேற்கே உள்ள நௌகல்பானில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவினால் வீடு மற்றும் பள்ளிக்கூடம் பாதிக்கப்பட்டுள்ளதாக மெக்சிகோ அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: மோடியை சந்திக்கிறார் டிரம்ப்!
6 பேர் பலி
4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உள்பட 6 பேர் பலியான நிலையில் காயமடைந்த 3 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக மீட்புக் குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் பணிப் படைகளை அனுப்புமாறு மாநில ஆளுநர் டெல்ஃபினா கோம்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: டிரம்புடன் தொலைபேசியில் பேசிய கமலா ஹாரிஸ்!
மெக்சிகோவுக்கு மேற்கே உள்ள ஜிலோட்ஸிங்கோவில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் 3 மாத குழந்தை உள்பட 9 பேர் பலியாகினர்.
இந்த நிலையில் 2 நாள்களுக்கு பின்னர் நௌகல்பானில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 10 மற்றும் 12 வயதுடைய இரண்டு குழந்தைகளும், 34 வயதுடைய பெண் ஒருவரும் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்புப்பணி
நிலச்சரிவில் சிக்கி பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், நிலச்சரிவு ஏற்படும் என்ற அச்சத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஜூலை மாத இறுதியில் மழைக்காலம் தொடங்கியதில் இருந்து மெக்சிகோ மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.