Saturday, September 21, 2024

மேடையில் பவன் கல்யாண் செய்த செயல்.. நெகிழ்ச்சியில் அண்ணன் சீரஞ்சிவி

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

பதவியேற்ற உடனே பவன் கல்யாண் செய்த செயல்.. நெகிழ்ச்சியில் அண்ணன் சீரஞ்சிவி – வைரல் வீடியோபவன் கல்யாண்

பவன் கல்யாண்

175 தொகுதிகளை கொண்ட ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்எல்ஏக்கள் அலோசனைக் கூட்டம் விஜயவாடாவில் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக சந்திரபாபு நாயுடுவை, ஜனசேனா தலைவர் பவன் கல்யான் முன்மொழிந்தார்.

பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கூட்டணி கட்சிகளிடன் ஆதரவு கடிதங்களுடன் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யான் ஆகியோர், ஆளுநர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இதனைத்தொடர்ந்து, ஆட்சியமைக்க வருமாறு சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

விளம்பரம்

இதையடுத்து சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக நான்காவது முறையாக இன்று காலை பதவியேற்றார். கடவுளின் சாட்சியாக என்று கூறி முதல்வர் பதவியை ஏற்றபோது அங்கிருந்த கட்சி தொட்ணடர்கள் ஆராவரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த விழாவிற்கு வருகை தந்த பிரதமர் மோடி சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற பின் அவரை ஆரத்தழுவி தனது வாழ்த்துகளை வெளிப்படுத்தினார்.

சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றுக் கொண்டதை அடுத்து அவரது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் அமைச்சராக பதவியேற்று கொண்டார். அமைச்சராக பதவியேற்ற பின் பவன் கல்யாண் மேடையில் இருந்த பிரதமர் மோடி, அமித் ஷா, சந்திரபாபு நாயடு உள்ளிட்ட அரசியல் தலைவர்களிடமும் வாழ்த்து பெற்றார்.

விளம்பரம்

#JUSTIN ஆந்திர அமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண் – அண்ணன் சிரஞ்சீவியின் காலில் விழுந்து வணங்கினார்#PawanKalyan#Minister#Chiranjeevi#AndhraPradesh#News18tamilnadu | https://t.co/uk2cvptM3npic.twitter.com/YHF9ebzRX5

— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 12, 2024

விளம்பரம்

இதை தொடர்ந்து மேடையின் அருகே சிறப்பு விருந்தினர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்ற அவர் நடிகர் ரஜினிகாந்த் உட்பட மற்றவர்களிடம் வாழ்த்து பெற்றார். அப்போது அங்கிருந்த அவரது அண்ணன் சீரஞ்சிவி காலில் விழுந்து ஆசிபெற்றார். இதனால் நெகிழ்ச்சியில் இருந்த சீரஞ்சிவி தனது சகோதரர் பவன் கல்யாணை கட்டுப்பிடித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் உற்சாகமாக கைத்தட்டி, ஆரவாரம் எழுப்பினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Andhra Pradesh
,
Pawan Kalyan

You may also like

© RajTamil Network – 2024