மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 81 ஆயிரம் கன அடியாக உயர்வு

by rajtamil
Published: Updated: 0 comment 8 views
A+A-
Reset

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 81 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

சேலம்,

கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன.

இந்த 2 அணைகளில் இருந்தும் மொத்தம் வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து வரும் தண்ணீரால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து விநாடிக்கு 84,000 கனஅடியில் இருந்து 95,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 68,032 கன அடியில் இருந்து 81,552 கன அடியாக உயர்ந்துள்ளது. இரவு 9 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 95.50 அடியாக உள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஓரிரு நாளில் அணையில் இருந்து நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அணைக்கு நாளை மாலைக்குள் வினாடிக்கு 83,000 கன அடி தண்ணீர் வரும் என்பதால் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024