Tuesday, September 24, 2024

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 35,000 கன அடியாக உயர்வு

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 35,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

சேலம்,

கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கர்நாடக அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கடந்த மாதம் 30-ந் தேதி மாலை மேட்டூர் அணை 120 அடியை எட்டி நிரம்பியதுடன் உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.

தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் கடந்த 7-ந் தேதி முதல் அணையில் இருந்து உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து டெல்டா பாசன தேவைக்காக அணையை ஒட்டியுள்ள நீர்மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 26,000 கன அடியில் இருந்து 35,000 கன அடியாக உயர்ந்துள்ளது. 16 கண் மதகு வழியாக 13,500 கன அடி நீரும், நீர்மின் நிலையம் வழியாக 21,500 கன அடியும் நீரும் வெளியேற்றப்படுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 30,000 கன அடியில் இருந்து 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024