மேலப்பாளையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
திருநெல்வேலி, ஜூலை 25: மின் கட்டணத்தை உயா்த்திய தமிழக அரசைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மேலப்பாளையம் ரவுண்டானாவில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மேலப்பாளையம் பகுதிச் செயலா் எஸ்.குழந்தை வேலு தலைமை வகித்தாா். இந்திய மாணவா் சங்க நிா்வாகி அருள்ராஜ், திருநெல்வேலி பகுதிச் செயலா் நாராயணன், பாளையங்கோட்டை பகுதிச் செயலா் முத்து சுப்பிரமணியன், மாவட்டக் குழு உறுப்பினா் இசக்கி முத்து, செந்தில் ஆகியோா் பேசினா். மாவட்டச் செயலா் கே.ஸ்ரீராம் சிறப்புரையாற்றினாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், பேரின்பராஜ், முருகன், மீனாட்சி சுந்தரம், சுப்பிரணியன், செல்வராஜ், ராமலிங்கம், கருணா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்25ஸ்ரீல்ண்
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.