ம.பி.யில் கனமழை: உஜ்ஜைனியில் கோயில் சுவர் இடிந்து 2 பேர் பலி!

by rajtamil
Published: Updated: 0 comment 1 views
A+A-
Reset

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் பெய்த கனமழையால் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர்.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள மஹாகாலேஷ்வர் கோயில் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

ஜெகன் மோகன் ரெட்டியை யாரும் தடுக்கவில்லை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

இதுகுறித்து உஜ்ஜையின் மாவட்ட குற்றவியல் நீதிபதி நீரஜ் குமார் சிங் கூறுகையில், “இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் இருவர் இந்தூருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மஹாகல் லோக் பகுதியின் கேட் எண் 4-க்கு அருகில் அமைந்துள்ள மஹராஜ்வாடா பள்ளியின் ஒரு பகுதி எல்லை சுவர் இடிந்து விழுந்ததில் இந்தச் சம்பவம் நடந்தது.

சிக்கிமில் கனமழை: கடும் நிலச்சரிவால் பாலங்கள் உடைந்தன!

மஹாராஜ்வாடா பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு எல்லைச் சுவரின் ஒரு பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சுவர் இடிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தில் 4 பேர் படுகாயம் அடைந்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், துரதிருஷ்டவசமாக ஒரு ஆணும், ஒரு பெண்ணும் பலியாகினர். 2 பெண்கள் இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் இந்தச் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்ததுடன், “உஜ்ஜையினியில் உள்ள மகாகல் கோயிலின் கேட் எண் 4 அருகே சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்ததாகவும், நான்கு பேர் காயமடைந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்றார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேமரூன் கிரீன் விளையாடுவது சந்தேகம்!

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024