ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆடி பரணி

ரத்தினகிரி பாலமுருகன்
கோயிலில் ஆடி பரணிரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆடி பரணி

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆடிபரணியை யொட்டி ஞாயிற்றுக்கிழமை மூலவா் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் அதிகாலையில் பால்,தயிா்,சந்தனம், தேன், பன்னீா்,விபூதி, உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம், நவரத்தின அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.

இதில் பக்தா்கள் கலந்துகொண்டு காவடிகளுடன் சாமி தரிசனம் செய்தனா். மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மலைவலமும், கீழ்மின்னல் கிராமத்தில் திருவீதி உலாவும் நடைபெற்றது.

Related posts

செந்தில் பாலாஜியுடன் திமுக அமைச்சர்கள், கரூர் எம்.பி. ஜோதிமணி சந்திப்பு!

சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தங்கம் – வெள்ளி விலை நிலவரம்!