Monday, September 23, 2024

ராகுலுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்த வேண்டும்: மத்திய அமைச்சர்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ரவ்னீத் சிங் பிட்டு கூறுகையில்,

இந்தியாவில் ஒதுக்கீடு குறித்து சமீபத்தில் அமெரிக்கா சென்றபோது காந்தியின் பேசுக்கு பிட்டு பதிலளித்துள்ளார். ராகுல் காந்தி குருத்வாராவுக்கு பலமுறை செல்கிறார், அவரை யார் தடுப்பது? இது கட்சி விவகாரம் அல்ல, அதற்கும் மேலானது.

இதையும் படிக்க:அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

தலைப்பாகை அணிவதைத் தடுத்தது யார்? குருத்துவாராவுக்குச் செல்வதைத் தடுத்தது யார்? எனவே காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் ராகுல் காந்திக்கு எதிராக தான் போராட்டம் நடத்த வேண்டும்.

இது காங்கிரஸ் அல்லது பாஜக பற்றியது அல்ல. பஞ்சாப் மற்றும் சீக்கியர்களைப் பற்றியது. சீக்கியர் கடா அணிய அனுமதிக்கப்படுவார்களா அல்லது குருத்வாராவுக்குச் செல்லலாமா? இதுதான் பிரச்னை.. சீக்கியர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மதத்தினருக்கும் தான் என்று அவர் கூறினார்.

பிட்டுவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ அலுவலகம் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ஜகத்புரா துப்பாக்கி சுடுதல் போட்டியில் 57வது ரயில்வே இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டியை துவக்கி வைக்க வந்திருந்தார்.

இதையும் படிக்க: பரதன் பாணியில்: கேஜரிவால் நாற்காலி அருகே மற்றொரு நாற்காலியில் அமர்ந்த அதிஷி!

ராகுலின் அமெரிக்க உரையில்..

ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது அவரின் உரையில், சீக்கிய சமூகம் குறித்து அவதூறு கருத்துகளைப் பேசியதாகவும், சீக்கிய சமூகத்தினரின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024