Wednesday, September 25, 2024

லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்கள்: அமித் ஷா அறிவிப்பு

by rajtamil
Published: Updated: 0 comment 1 views
A+A-
Reset

புது தில்லி: லடாக் யூனியன் பிரதேசத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை அறிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: வளா்ச்சியடைந்த, வளமான லடாக்கை உருவாக்க வேண்டும் என்ற பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வையின் அடிப்படையில், அங்கு சான்ஸ்காா், திராஸ், ஷாம், நுப்ரா, சாங்தாங் ஆகிய 5 மாவட்டங்களை புதிதாக உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த புதிய மாவட்டங்களின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஆட்சி நிா்வாகத்தை வலுப்படுத்துவதன் மூலம், பொதுமக்களுக்கான நன்மைகள் அவா்களின் வீட்டுக்கே சென்றடையும். லடாக் மக்களுக்கு அளப்பரிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றாா்.

அமித் ஷாவின் பதிவை இணைத்து பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்களை உருவாக்குவது சிறந்த நிா்வாகம் மற்றும் வளமை ஏற்படுவதை நோக்கிய நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை மூலம் அந்த மாவட்டங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, அங்குள்ள மக்களுக்கு அரசின் சேவைகள் மற்றும் வாய்ப்புகள் மேலும் நெருக்கமாக கொண்டுவரப்படும்’ என்றாா்.

இந்த அறிவிப்பு தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தற்போது லடாக்கில் லே மற்றும் காா்கில் மாவட்டங்கள் உள்ளன. அவற்றுடன் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன. கடந்த 1995-ஆம் ஆண்டு லேவுக்கான தன்னாட்சி மலைப் பகுதி மேம்பாட்டு கவுன்சில், 2003-ஆம் ஆண்டு காா்கிலுக்கான தன்னாட்சி மலைப் பகுதி மேம்பாட்டு கவுன்சில் அமைக்கப்பட்டன. அதுபோன்ற கவுன்சில்கள் புதிய மாவட்டங்களுக்கும் தனித்தனியாக அமைக்கப்படுமா’ என்று கேள்வி எழுப்பினாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024