லேடீஸ் ஹாஸ்டலுக்குள் புகுந்து இளம்பெண் கழுத்தறுத்து கொலை…

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

லேடீஸ் ஹாஸ்டலுக்குள் புகுந்து இளம்பெண் கழுத்தறுத்து கொலை… இளைஞர் செய்த கொடூர செயல்… அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்!சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

பெங்களூருவில் தங்கும் விடுதிக்குள் புகுந்து இளம்பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரை சேர்ந்த கீர்த்தி குமாரி என்பவர் பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 23 ஆம் தேதி, இரவு 11 மணி அளவில் கோரமங்கலாவில் உள்ள அவரது தங்கும் விடுதிக்குள் நுழைந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞர் கீர்த்தி குமாரியை சரமாரியாக கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

விளம்பரம்

இக்கொடூர சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#JUSTIN பெங்களூருவில் விடுதிக்குள் புகுந்து இளம்பெண்ணை கொடூரமாக குத்திக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் #Bangalore#CCTV#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJpic.twitter.com/tu2yMZHkbT

— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 26, 2024

விளம்பரம்

இதுகுறித்து விடுதி நிர்வாகத்தினரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அபிஷேக்கை தனது சகோதரர் என்று கீர்த்தி குமாரி கூறியதாகவும், அதன்பேரில் தான் அவரை உள்ளே அனுமதித்ததாகவும் விடுதி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிக்க:
8 கி.மீ. தூரம் ஓடி கொலையாளியை கண்டுபிடித்த போலீஸ் மோப்ப நாய்! – கர்நாடகாவில் நடந்த அதிரடி சம்பவம்!

விளம்பரம்

இந்நிலையில், தனது காதலை பிரித்த ஆத்திரத்தில் கீர்த்தி குமாரியை அபிஷேக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தலைமறைவாக உள்ள அபிஷேக்கை காவல்துறையினர் தேடி வரும் நிலையில், இக்கொலை குறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Bangalore
,
CCTV
,
Crime News
,
murder case

You may also like

© RajTamil Network – 2024