‘வக்ஃப்’ அதிகாரத்தை கட்டுப்படுத்த புதிய மசோதா! இதுவரை நடந்தது என்ன?

‘வக்ஃப்’ அதிகாரத்தை கட்டுப்படுத்த புதிய மசோதா! இதுவரை நடந்தது என்ன? ஒரு ரீவைண்ட்!

இந்தியாவில் உள்ள பல சொத்துகளுக்கு உரிமைகோரும் வக்ஃப் வாரியத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக 40 திருத்தங்களை செய்ய மத்திய அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் இந்த வாரத்தில் நாடாளுமன்ற அமர்வில் மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.

நாட்டில் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்த மன்னர்களும், பெரிய முஸ்லீம் செல்வந்தர்களும் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான சொத்துகளை இறைவனுக்கு தானமாக வழங்கினர். இந்த சொத்துகள் வக்ஃப் சொத்துகள் என்று கூறப்படும் நிலையில், இதில் இருந்து கிடைக்கும் வருமானத்தை கொண்டு முஸ்லீம்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்படுகின்றன. பள்ளிவாசல் மற்றும் தர்கா பராமரிப்பு, கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கும் செலவிடப்படுகிறது.

விளம்பரம்

இத்தகைய சொத்துகளை பராமரிக்க கடந்த 1954ஆம் ஆண்டு வக்ஃப் வாரிய சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி மாநில அரசுகளால் மாநில வக்ஃப் வாரியங்கள் நிறுவப்பட்டன. இந்த அமைப்புகள் வக்ஃப் சொத்துகளை நிர்வகித்து வருகின்றன. இதன்கீழ் மாவட்ட வக்ஃப் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வக்ஃப் வாரியங்களை கண்காணிப்பதற்காக, வக்ஃப் சட்டத்தின்படி, மத்திய வக்ஃப் கவுன்சில் கடந்த 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் கீழ் இது இயங்குகிறது. 1954ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வக்ஃப் சட்டம் ரத்து செய்யப்பட்டு, கடந்த 1995ஆம் ஆண்டு புதிய வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது.

விளம்பரம்

கடந்த 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஆட்சியில் இருந்தபோது, இந்த சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்படி, வக்ஃப் வாரியத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதனிடையே வக்ஃப் சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று முஸ்லீம் தலைவர்கள், பெண்கள், ஷியா மற்றும் போராஸ் உள்ளிட்ட சில பிரிவினர் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கும் சொத்துகளுக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்துவது, மத்திய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது உள்ளிட்ட புதிய அம்சங்கள் மசோதாவில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

விளம்பரம்

தற்போது நாடு முழுவதும் 30 வக்ஃப் வாரியங்களின் கீழ் சுமார் 9.4 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான சொத்துகள் இருக்கின்றன. இந்நிலையில், வக்ஃப் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் வரவிருக்கும் தேர்தல்களில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.

முந்தைய நிகழ்வுகள்:

• அவிநாசி வழக்கில், 1996ல் செய்யூர் தேவேந்திரன் நகரில் 6.3 ஏக்கர் நிலத்துக்கு, வருவாய் பதிவேடுகளில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த 216 பேருக்கு, இலவச பட்டா வழங்கப்பட்டது. அவிநாசி, தொட்டிபாளையம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இணை பதிவாளர் அலுவலகங்களுக்கு கடந்த 8-ம் தேதி கடிதம் எழுதிய வாரியம், அவிநாசி மற்றும் திருப்பூரில் உள்ள சில சர்வே எண்களில் உள்ள சுமார் 93 சொத்துகளை வக்ஃப் சொத்துக்களாகக் கூறியுள்ளது.

விளம்பரம்

• திருச்சி மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருச்செந்துறை என்ற கிராமத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான சுந்தரேஸ்வரர் கோயிலும் உள்ளது. இந்த சொத்துக்கும் வக்ஃப் எப்படி உரிமை கோரும் என்று கிராம மக்கள் இப்போது ஆச்சரியப்படுகிறார்கள்.

• அர்ப்பணிப்பு அல்லது பயனருக்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், ஒரு பாழடைந்த சுவர் அல்லது மேடையை பிரார்த்தனை அல்லது நமாஸ் வழங்குவதற்கான நோக்கத்திற்காக ஒரு மத ஸ்தலத்தின் அந்தஸ்தை வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் கூறியது. பல்கலைக்கழகம், டவுன்ஷிப் மற்றும் பிற புகழ்பெற்ற நிறுவனங்களை அமைப்பதற்காக நிலத்தை குத்தகைக்கு விட்டதால், தெலங்கானா அரசிற்கு இந்த முடிவு ஒரு பெரிய நிவாரணமாக அமைந்தது. ஏப்ரல் 2012-ல் ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் தோல்வியடைந்த பின்னர் அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

விளம்பரம்

• ராஜஸ்தான் போர்டு ஆஃப் முஸ்லீம் வக்ஃப் தனது தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ராஜஸ்தான் அரசிடம் நிதி உதவி கோரி வருகிறது. வக்ஃப் வாரியம் ராஜஸ்தான் முழுவதும் பட்டியலிடப்பட்ட 18,000-க்கும் மேற்பட்ட சொத்துக்களைக் கொண்டுள்ளது; அதோடு 7,000-க்கும் மேற்பட்ட சொத்துக்களில் இருந்து வருமானத்தை ஈட்டுகிறது என்றும் கூறப்படுகிறது.

Also Read |
பூமியின் மிகத் தொலைதூர இடம் எது தெரியுமா? மர்மங்கள் புதைந்திருக்கும் ‘பாயிண்ட் நெமோ’-க்கு சென்ற ஒரே ஒரு நபர்!

• 1500 ஆண்டுகள் பழமையான மானேந்தியவல்லி சந்திரசேகர சுவாமி கோயில் நிலத்திற்கு தமிழ்நாடு வக்ஃப் வாரியம் உரிமை கோரியுள்ளது. தமிழ்நாட்டில் திருச்செந்துறை கிராமத்திலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் இக்கோவிலுக்கு 369 ஏக்கர் சொத்து உள்ளது.

விளம்பரம்

• 2021ஆம் ஆண்டில், தேவபூமி துவாரகாவில் உள்ள பெட் துவாரகாவில் உள்ள இரண்டு தீவுகளின் உரிமையைக் கோரி, குஜராத் உயர்நீதிமன்றத்தில் வக்ஃப் வாரியம் ஒரு விண்ணப்பத்தை எழுதியது. ஆனால், இதனால் ஆத்திரமடைந்த நீதிமன்றம் மனுவை விசாரிக்க மறுத்துவிட்டது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Congress
,
delhi
,
PM Modi

Related posts

Pakistan: 7 Labourers From Multan Killed In Terrorist Attack In Balochistan’s Panjgur

Kerala Launches New Entrance Training Programme Benefiting Over 8 Lakh Students

AI Express-AIX Connect Merger In October First Week; ‘I5’ To Fly Into Sunset