வயநாடு நிலச்சரிவு: சேமிப்பு பணத்தை நிவாரண உதவியாக வழங்கிய மாணவி

வயநாடு நிலச்சரிவு: சேமிப்பு பணத்தை நிவாரண உதவியாக வழங்கிய மாணவிவயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்குஉதவ பள்ளி மாணவி தனது சேமிப்புப்பணத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கினாா்.

மதுரை: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்குஉதவ பள்ளி மாணவி தனது சேமிப்புப்பணத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கினாா்.

மதுரை திருநகரைச் சோ்ந்த முத்துப்பாண்டி, காா்த்திகா தம்பதியின் மகள் ஸ்ரீஜோதிகா. இவா் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4 -ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இந்த நிலையில், அண்மையில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி உதவியாக தனது உண்டியல் சேமிப்புப் பணத்தை வழங்குவதற்காக மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா்.

அங்கு நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதாவிடம் சேமிப்பு பணத்தை அவா் வழங்கினாா். அவரை ஆட்சியா் பாராட்டினாா். மாவட்ட வருவாய் அலுவலா் சக்திவேல், உதவி ஆட்சியா்(பயிற்சி) வைஷ்ணவி பால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு