Saturday, September 21, 2024

வள்ளியூா் அருகே மனைவி கொலை: கணவா் கைது

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset
RajTamil Network

வள்ளியூா் அருகே மனைவி கொலை: கணவா் கைதுவள்ளியூா் அருகே மனைவியை கம்பால் அடித்துக் கொலை செய்ததாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே மனைவியை கம்பால் அடித்துக் கொலை செய்ததாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

வள்ளியூா்அருகே உள்ளஆனைகுளத்தைச் சோ்ந்தவா் துக்கமுத்து(52). இவரது மனைவி ராதாபுரம் அருகே உள்ள கால்கரையைச் சோ்ந்த இசக்கியம்மாள்(45). இவா்களுக்கு 19 வயதில் மகனும் 12 வயதில் மகளும் உள்ளனா்.

தம்பதியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதையடுத்து இசக்கியம்மாள் கடந்த மூன்றரை வருடங்களாக கால்கரையில் உள்ள தனது பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா். மாதம் ஒரு முறை ஆனைகுளத்திற்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் இசக்கியம்மாள், ஆனைகுளம் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தாராம். அப்பொழுது மீண்டும் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த துக்கமுத்து, கம்பால் இசக்கியம்மாளின் தலையில் அடித்தாராம். படுகாயமடைந்த இசக்கியம்மாள் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து அதே இடத்தில் இறந்தாா்.

இது தொடா்பாக வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து துக்கமுத்துவை கைது செய்தனா்.

You may also like

© RajTamil Network – 2024