Tuesday, September 24, 2024

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு… சென்னையில் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

மெட்ரோ ரெயில் பணிக்காக பரங்கிமலையில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையை அடுத்த பரங்கிமலையில் மவுண்ட்- பூந்தமல்லி சாலை, புகாரி ஓட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளுக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணி முதல் 27-ம் தேதி காலை 6 மணி வரை என 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து போரூர் செல்லும் வாகனங்களில் எந்த மாற்றமும் இல்லை. அவை வழக்கம் போல் இயக்கப்படும். போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் பெல் ராணுவ சாலை சந்திப்பில் உள்ள மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக புதிய சாலையை நோக்கி இடதுபுறம் திரும்பி, புகாரி ஓட்டலுக்கு எதிரே உள்ள போர் கல்லறை – ராணுவ சாலை சந்திப்பில் டிபென்ஸ் காலனி 1-வது அவென்யூ வலதுபுறம் திரும்பி கண்டோன்மென்ட் சாலை இடதுபுறம் திருப்பி சுந்தர் நகர் 7-வது குறுக்கு தனகோட்டி ராஜா தெரு வழியாக கிண்டி தொழிற்பேட்டை எஸ்டேட் தெற்கு கட்ட சாலை 100 அடி சாலை சந்திப்பு சென்று வாகனங்கள் கத்திப்பாரா மேம்பாலத்தை அடைய வலதுபுறமாகவும், வடபழனியை அடைய இடதுபுறமாகவும் நோக்கிச் செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024