வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் உல்லாச வீடியோ: கள்ளக்காதலி புகாரில் தொழிலாளி சிக்கினார்

by rajtamil
Published: Updated: 0 comment 25 views
A+A-
Reset

தொழிலாளி நரசிம்மராஜ் அரசு கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை செல்போனில் பார்த்துக் கொண்டு இருந்ததாக தெரிகிறது.

கோவை,

கோவையை சேர்ந்தவர் 33 வயது பெண். திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவருக்கு, பக்கத்து வீட்டில் வசிக்கும் நகை பட்டறை தொழிலாளியான நரசிம்மராஜ் அரசு (வயது 41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இதனால் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து உள்ளனர்.அதை நரசிம்மராஜ் அரசு தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்து இருந்ததாக தெரிகிறது.

அவர் கடந்த 8-ந் தேதி கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை செல்போனில் பார்த்துக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது அவரை அறியாமல் கைவிரல் பட்டு அந்த உல்லாச வீடியோ செல்போனில் வாட்ஸ்-அப் ஸ்ட்டேட்டசுக்கு சென்று உள்ளது. அந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வீடியோவை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அது பற்றி சம்மந்தப்பட்ட பெண்ணிடம் கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கோவை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நரசிம்மராஜ் அரசை கைது செய்தார்.

You may also like

© RajTamil Network – 2024