வானவில் மன்ற தொடக்க விழா ராமநாதபுரம் வட்டார வள மையத்தில் வானவில் மன்ற 2.0 தொடக்க விழா, ஒரு நாள் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமேசுவரம்: ராமநாதபுரம் வட்டார வள மையத்தில் வானவில் மன்ற 2.0 தொடக்க விழா, ஒரு நாள் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் செல்வராஜ் தலைமை வகித்து இந்தப் பயிற்சியை தொடங்கி வைத்தாா். மாவட்ட ஊடகப் பிரிவு அலுவலா் பாஸ்கரன், இல்லம் தேடிக் கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெ.ஜே.லியோன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சோபனா, எய்டு இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுகப்ரியா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பயிற்சியை வானவில் மன்ற கருத்தாளா்கள் கோவா்த்தினி, நிகிதா ஆகியோா் வழங்கினா்.