Sunday, September 22, 2024

விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்ட ரைபகினா

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரைபகினா, செக்குடியரசின் பார்போரா கிரெஜிகோவா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரைபகினா 6-3, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் பார்போரா கிரெஜிகோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். வெற்றி பெற்ற பார்போரா கிரெஜிகோவா இறுதிஆட்டத்தில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியை எதிர்கொள்ள உள்ளார். இந்த ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024