0
விருதுநகர்: விருதுநகர் அருகே முத்தல்நாயக்கன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் சனிக்கிழமை காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே முத்தல்நாயக்கன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் சனிக்கிழமை காலை திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவில் பெய்யும் -வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல்
இந்த வெடி விபத்தால் சுமார் 15 கி.மீ சுற்றளவிற்கு பயங்கர அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து வருவதால் உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சாத்தூர் மற்றும் சிவாகாசி வட்டங்களில் இருந்து தீயணைத்துறை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.