நடிகை மாளவிகா மோகனன் தன் தாயுடனான விருப்பமான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மலையாள சினிமாவில் 2013-ம் ஆண்டில் வெளியான "பட்டம் போலெ" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர் மாளவிகா மோகனன்.
கடந்த 10 ஆண்டுகளாக தனக்கான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழில் ரஜினிகாந்த், விஜய், விக்ரம் உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் நடித்துவிட்டார். தற்போது, கார்த்தியின் சர்தார் -2 படத்தில் இணைந்துள்ளார்.
தங்கலான் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கியிருந்ததற்காக பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.
மும்பைக்குக் குடியேறும் ஜெயம் ரவி?
இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர் மாளவிகா மோகனனிடன், ‘உங்கள் தாயுடனான சமீபத்திய விருப்பமான புகைப்படம் எது?’ எனக் கேட்டிருந்தார்.
அதற்கு மாளவிகா, ’ஓணத்தில் அம்மாவுடன் இருந்தபோது’ எனக் குறிப்பிட்டு தன் விருப்பமான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.