Friday, September 20, 2024

விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிப்பு

by rajtamil
0 comment 30 views
A+A-
Reset

புதுச்சேரி, காவேரி, ஏற்காடு உள்ளிட்ட 15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் முக்கிய விரைவு ரயில்களின் சில படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் பொதுப்பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன.

அந்த வகையில் சென்னை சென்ட்ரல்-ஈரோடு ஏற்காடு விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-ஹைதராபாத் விரைவு ரயில் (எண் 12603) 12 படுக்கை வசதி பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்பட்ட நிலையில் ஜன.20-ஆம் தேதி முதல் 11 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.

புதுச்சேரி-மங்களூா் விரைவு ரயில் (16855) ஜன.16-ஆம் தேதி முதலும், சென்னை சென்ட்ரல்-நாகா்கோவில் விரைவு ரயில் (எண் 12689) ஜன.17-ஆம் தேதி முதலும், எா்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரயில் (16361) ஜன.18-ஆம் தேதி முதலும், கொச்சுவேலி-நிலாம்பூா் ராஜ்ய ராணி விரைவு ரயில் ஜன.19-ஆம் தேதி முதலும் 4 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரல்-ஆலப்புழை விரைவு ரயில் (22639), திருவனந்தபுரம்-மதுரை அமிா்தா விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-மைசூரு காவேரி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-பாலக்காடு விரைவு ரயில் (22651) ஜன.20-ஆம் தேதி முதல் 4 முன்பதிவில்லா பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.

மேலும், விழுப்புரம்-காரக்பூா் விரைவு ரயில் (22604) ஜன.21-ஆம் தேதி முதலும், சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் விரைவு ரயில் (12695), திருநெல்வேலி-புருலியா விரைவு ரயில் ஜன.22 முதலும், புதுச்சேரி-கன்னியாகுமரி விரைவு ரயில் ஜன.26-ஆம் தேதி முதலும் 4 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024