மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ இல்லத் திருமண விழா அழைப்பிதழ் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
குலம், கோத்திரம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு வைணவ முறைப்படி வைகோவின் பெயரில் அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளதால், இணையத்தில் பலர் விமர்சித்து வருகின்றனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிட இயக்கத்தைப் பின்பற்றி வருபவர். இவரின் மகன் துரை வைகோ, திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
துரை வைகோ மகள், அதாவது வைகோவின் பேத்தியின் திருமண அழைப்பிதழ் என ஒன்று பலரால் பகிரப்பட்டு வருகிறது.
வைணவ முறைப்படி அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி இருவீட்டாரின் குலம், கோத்திரம், நட்சத்திரம், நாள், நல்லநேரம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு திருமண அழைப்பிதழ் அடிக்கப்பட்டுள்ளது.
திராவிட இயக்கத்தின் முன்னோடியில் ஒருவராக அறியப்படும் வைகோ, தனது பேத்தி திருமணத்துக்கு மட்டும் ஏன் இவ்வாறு அழைப்பிதழ் அச்சடித்துள்ளார்? என இணையத்தில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், வைகோ மற்றும் துரை வைகோவை விமர்சித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | சொல்லப் போனால்… மகளிரால் மட்டுமே முடியும்!
இந்த அழைப்பிதழ் உண்மையில் வைகோ இல்லத் திருமண விழாவுக்கான அழைப்பிதழா? அல்லது போலியானதா? என்ற கேள்வியும் இணையத்தில் எழுந்துள்ளது.